Monday, May 3, 2021

ஆலம்பட்டியான் கருப்பட்டி காபி.....

 நம்ம வீட்டுல இருக்கிற பெரியவங்க இன்னிக்கும் திடகாத்திரமா இருக்காங்கன்னா - நாங்கல்லாம் உங்களை மாதிரி இல்ல காலைல எந்திரிச்ச உடனே கருப்பட்டி காபி தான் அப்டின்னு சொல்வாங்க. இப்போல்லாம் டல்கோனா, கேப்பசினா-ன்னு உலகம் மாடர்னா போய்கிட்டு இருக்கு. நம்மல்லாம் கருப்பட்டி காபிக்கு எங்கே போறதுன்னு யோசிக்கிறீங்கல்ல? அதுக்கென்ன? வீட்டுல போட்டு குடிக்கலாம்னா, நல்ல கருப்பட்டி கிடைக்கணுமே, பதநீருக்கு பதிலா சர்க்கரை தண்ணிய சேர்த்து தான் கருப்பட்டி செய்றாங்கன்னு சொல்றத கேட்டு, கொஞ்ச நஞ்சம் இருந்த கருப்பட்டி காபி ஆசையும் காத்துல காணாம போயிரும். இந்த தேவையை புரிஞ்சிகிட்டு தான்  சென்னைல பல இடங்கள்லயும் ஆலம்பட்டியான் கருப்பட்டி காப்பின்னு ஒரிஜினல் கருப்பட்டி காப்பிய ஒரு BRAND-ஆக கொண்டு வந்திருக்காங்க. 


இந்த கருப்பட்டி காபியோட தரத்துக்காகவே, மக்கள் பல மைல் தொலைவை  கடந்து கருப்பட்டி காபியை தேடி வரும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்..இந்த கருப்பட்டி காபியில் இனிப்பிற்காக கருப்பட்டி, நாட்டு சர்க்கரை சேர்க்கிறாங்க. ஒரு ஆரோக்கியமான பானம் இப்படி மிக குறைந்த விலையில் யாராலயுமே சொல்ல முடியாது..இங்கே நீங்க போறப்போ நீங்க 15 / 20 ரூபாயில் காபி / டீ குடிக்கலாம். 


கருப்பட்டி பல்வேறு விதங்கள்ல உடலுக்கு நல்லது. உடலில் இரத்த சிகப்பணுக்கள், இரும்பு சத்தை அதிகரிக்க உதவும். அது மட்டும் அல்ல. திருநெல்வேலின்னாலே நமக்கு அல்வா தான் நினைவுக்கு வரும். இந்த அல்வாவிற்காக திருநெல்வேலி போய் சாப்பிட முடியுமா என்ன? திருநெல்வேலி அல்வா பிரியர்களுக்காக திருநெல்வேலி அல்வாவும் இங்கே விற்பனை செய்யப்படுது. சாயங்காலம் ஆனா போதும், இங்கே தனியா பெஞ்ச் போட்டு கருப்பட்டி இனிப்பு பணியாரம் மற்றும் கார பணியாரம் சுடசுட விற்பனை களை கட்டும்.


தனியா ஆலம்பட்டியான் அல்வா கடையும் இந்த கடையை ஒட்டி இருக்குது. இங்கே திருநெல்வேலி அல்வால இருந்து ஆரம்பித்து, கருப்பட்டி பர்பி மற்றும் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுது. அதுலயும் ஜூஸியாக இருக்கும் கருப்பட்டி ஜாங்கிரியின் சுவை அலாதி தான். சாப்பிட்டா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். நேரம் கிடைத்தால் இந்த கடைய VISIT பண்ணி பாருங்களேன்.


Sunday, November 19, 2017

80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பட்டின பிரவேசம் படத்தில், வான் நிலா நிலா அல்ல பாடல் எழுதும் போது நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் 

M.S.விஸ்வநாதனிடம் கவிஞர் கண்ணதாசன் "விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என சொல்ல, விஸ்வநாதன்  ‘லா...லல்லா..லல்லா...’ என்று ட்யூனை பாடிக்காட்ட, கண்ணைமூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள்வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள்மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூட ‘லா’ வில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும்சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலு ‘லா’தான் பாக்கி’ என்றார் M.S.விஸ்வநாதன். ‘என்னடாசொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலு‘லா’தான் உங்க பாட்டுல வரல!’ என்று  M.S.விஸ்வநாதன் சொன்னதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.                         

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா 
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா 
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் 
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..




80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

மௌன ராகம் படத்தில் நிலாவே வா பாடலை எஸ்.பி.பி. பாடும் போது, மணிரத்னம், இளையராஜா ஆகியோர் ஸ்டுடியோவில் இல்லாததால் என்ன விதமான சூழலில் பாடல்  படமாக்கப்படும் என தெரியாமலேயே பாடியிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் இந்த பாடலை திரையில் பார்த்து விட்டு, "இது சோகப்பாடலா என்னிடம் சொல்லவே இல்லையே" என கூறினாராம் அவர். 



நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

காவேரியா கானல் நீரா - 
பெண்மை என்ன உண்மை ? 

முள்வேலியா - முல்லைப்பூவா .
சொல்லு - கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும்சிறு்சி பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை 
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட 
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..
என்னாளும் உன் பொன்வானம் நான்

Saturday, November 18, 2017

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும் 



1987-ல்  இளையராஜா இசையில் வெளிவந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், செண்பகமே செண்பகமே பாடல் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் இவர். 

படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு 
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 

தென்பொதிகை சந்தனமே

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்



செந்தூரப்பூவே பாடலின், பாடல் தொடங்கும் போது, சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘Slow motionல்’ ஓடவிட்டு, படம் பிடித்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவிற்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. அதனால், ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)
தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)
நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)


80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப்  பிரபலமடைந்தது இந்தப் பாடல்.   ‘தும்பி வா’ பாடலின் மெட்டு இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்று . இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்,இந்த 'தும்பி வா' பாடலும் ஒரே மெட்டுதான். இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று. என எங்கேயோ அவர் பகிர்ந்ததாக ஞாபகம்.


படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது 
சந்தத்தில் மாறாத நடையோடு என் 
முன்னே யார் வந்தது 
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்தள் மலரை 
நீ சொன்னால் நான் நம்பவோ 
கால் என்றே செவ்வாழை இணைகளை 
நீ சொன்னால் நான் நம்பி விடவோ 
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

அந்திப்போர் காணாத இளமை 
ஆடட்டும் என் கைகளில் 
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் 
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை 
கொஞ்சம் தா..ஆ… 
கொஞ்சத்தான்..ஆ.. 
கண்ணுக்குள் என்னென்ன நளினம் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

ஆடை ஏன் உன் மேனி அழகை 
ஆதிக்கம் செய்கின்றது 
நாளைக்கே ஆனந்த விடுதலை 
காணட்டும் காணாத உறவில் 
கை தொட்டும்...ஆ 
மெய் தொட்டும்..ஆ 
சாமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

Sunday, October 29, 2017

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....



 எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம்.நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும். அதனால எப்பவும் நல்லதையே யோசிங்க. 

Sunday, October 1, 2017

டிப்ஸ் டிப்ஸ்

டிப்ஸ் டிப்ஸ்

காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா ?
வறுத்த வேர்க்கடலை பருப்பை பொடி செய்து , கார குழம்பில் கலந்து விட்டால் காரம் குறைந்து சுவையான குழம்பாகி விடும்.

தவாவில் பிசுக்கு போகவில்லையா ?
சூடான தயிர் அல்லது சூடான மோரை தவாவில் ஊற்றி, ஆறியபின் தேய்த்து கழுவ, தவா பளபளவென இருக்கும்.

ஆரஞ்சு டீ வேண்டுமா ?
டீ தயாரித்ததும் அதில் ஓரிரு ஆரஞ்சு பழ சுளைகளை போட்டால் டீ மணமும் சுவையும் கொள்ளை கொள்ளும்.

ஜீரணத்தை தூண்டும் சப்பாத்தி:-
கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும் போது, நாலு கரண்டி மோருடன், சிறிது மிளகு, சீராக பொடிகளை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

ரவையை மாத்துங்க :-
அரிசி, உப்புமா, பிடிகொழுக்கட்டை செய்யும் போது, அரிசி ரவைக்கு பதிலாக கோதுமை ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து உபயோகித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

அரைத்த மாவு தோசை :-
அரைத்த மாவு தோசை செய்யும் போது அதில் சிறிது மோர்விட்டு மாவை கரைப்பது வழக்கம். மோர் இல்லாத சமயத்தில் எலுமிச்சை சாறை விட்டு சுவை சேர்க்கலாம். அதுவும் இல்லாத சமயத்தில் தக்காளியையும், பச்சை மிளகாயையும் சுவைக்கேற்ப அரைத்து விட்டு மாவை கரைத்தால் அலாதி ருசி.

சாத கட்லட் :-
வெஜிடபிள் கட்லட் செய்யும் போது கைப்பிடி அளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்து கட்லட் செய்தால், கட்லட் மிருதுவாக இருப்பதோடு அளவும் கூடுதலாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் சூப் :-
காய்கறிகளை வேக வைத்த நீரை கொட்டி விடாமல் மிளகு, சீரக பொடிகளுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய், தேவையான உப்பு சேர்ந்தால் சூப்பரான சூப் ரெடி ..

பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு, கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைத்தால் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவும் செய்யாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.

வெங்காயம் நறுக்கிய அரிவாள்மனை அல்லது கத்தியில் ஒரு வெற்றிலையை எடுத்து கசக்கி தேய்த்தால் வாடை போய் விடும்.

பனங்கிழங்கு கிடைக்கும் போது, சுவையான சத்து கஞ்சி மாவு தயார் செய்து வைத்து கொள்ளலாம். குச்சி கிழங்கை தோல் நீக்கி, வில்லைகளாக்கி உலர்த்தி சிறிது ஏலக்காய் சேர்த்து மிக்சியில் பவுடராக்கி கொள்ளவும். அந்த மாவில் கஞ்சி தயாரித்து பால் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான மணமான கஞ்சி இது.

பீட்ரூட் தோல்களை கனகாம்பரம் பூச்செடிக்கு உரமாக போட்டால், பூக்கள் ஊதா நிறம் கலந்த சிவப்புடன் அழகாக பூக்கும்.

Saturday, August 19, 2017

பாடலும் கதையும் - சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்களில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் " சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாடல் கம்போசிங் செய்ய அவர் எடுத்த நேரம் மிக மிக குறைவு.. அனால் சில பாடல்கள் கம்போஸ் செய்ய ஐந்து மாதங்கள் வரை ஆகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.





பாடலும் கதையும்

16 வயதினிலே படத்தில் வரும் "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா" - இந்த பாடலை பாட வேண்டிய பாட்டு தான். ஆனால் அவருக்கு அந்நேரத்தில் தொண்டை கட்டிக்கொண்டதால், அந்த பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த பாடல் கிடைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய முன்னேற்றம் இன்னும் தாமதப்பட்டிருக்கும் என மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



இளமையான சருமம் - பின்பற்ற வேண்டியவை

இருபத்தைந்து வயதிற்கு பின், தோலில் கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். அதனால் தோலை  பாதுகாக்கும் உணவுகளான கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், வெங்காயம், எலுமிச்சை என விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை மறக்காமல் சேர்க்க வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ருட் தினமும் எடுத்து கொள்ள வேண்டும். அடர் நிறங்கள் அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்து கொள்வது அவசியம், செலினியம் அதிகமுள்ள மஷ்ரூம், துத்த நாகம் அதிகமுள்ள பச்சை கீரைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் ஐந்து எண்ணிக்கையுள்ள பாதாம், முந்திரி, வால்நட் எடுத்து கொள்ள வேண்டும். விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெற வேண்டும். குறணிந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சோப் வாங்கும் போது, PH லெவல் பார்த்து சமநிலையில் உள்ள சோப் வாங்க வேண்டும். தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்க   செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். மனதை ரிலாக்ஸ்ட்டாக வைத்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் சரியாக பின்பற்றினால் ஸ்கின் அழகாக இளமையாக இருக்கும்.

Tuesday, August 15, 2017

தினம் ஒரு நெல்லிக்காய்

புளிப்பு சுவைகளிலேயே மிகவும் நன்மையை தருவது நெல்லிக்காய் தான் என பண்டை கால ஆயுர்வேத நிபுணர் சுஸ்ருதர் சொல்லியிருக்கார். ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது 20 ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு சமம் என சொல்லுவார்கள். பார்வை மங்கல், கண் அயர்ச்சியை போக்கும் ஷக்தி நெல்லிக்காய்க்கு இருக்கிறது.  ஒரு நெல்லிக்காயும், சம அளவிலான தங்கத்தையும் ஒப்பிட்டால், தங்கத்தை விட நெல்லிக்காய் தான் அதிக பலன் தரக்கூடியது என வட மொழிப்பாடல் ஒன்று கூறுகிறது. நமது உடல் பலவீனம் அடைய காரணம் என்ன என்று பார்த்தால், பழைய செல்களும், திசுக்களும் அழிந்து, புதுப்புது செல்களும், திசுக்களும் உருவாவது தான் காரணம். தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலின் செல்களும், திசுக்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மருந்து போன்றது. நமது வட மொழி நூல்கள் நெல்லிக்காயை சர்வ உத்தம பழம், அதாவது பழங்களில் எல்லாம் சிறந்த பழம் என கூறுகிறது. அதனால் நெல்லிக்காய தினம் உணவில் ஜாம், ஊறுகாய், ஜூஸ் என ஏதாவது ஒரு வடிவத்தில் எடுத்து கொள்ளலாமே !

Saturday, January 7, 2017

புதிர்கள்

புதிர்கள்
இன்றைய புதிர்
சிகப்பு, வெள்ளை, நீல நிற  கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக்  மூன்று  பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.
அருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.
கார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்
வருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.
போலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா ?

Sunday, October 16, 2016

நேராக உட்கார்வது அவசியம் !!!!



நாம் சரியான முறையில் உட்கார்வது அவசியம். நீங்கள் எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா ? நீங்கள் ஆபிஸ் சேரில் எவ்வாறு உட்கார்ந்து எழுதுகிறீர்கள் , டைனிங் டேபிளில் எவ்வாறு காய்கறி வெட்டுகிறீர்கள் , பேருந்துக்கு உட்கார்ந்து இருக்கும் போது எவ்வாறு உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கவனித்தது உண்டா ?

எப்போதும் சரியான முறையில் உட்கார்வது என்பது உடல் நலத்திற்கு நல்லது. வளைந்து உட்கார்வது உடம்பிற்கு ஸ்ட்ரெஸ்ஸையும், அசதியையும் கொடுக்கும். இதனால் உடம்பில் சில அங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

நல்ல நிலையில் உட்கார்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது. உடலுறுப்புகளை இந்த சிறிய முயற்சியினால் நன்றாக வைத்திருக்க முடிகிறது.

பெரிய பெரிய ஓட்டல்களில் தலைப்பாகை அணிந்துள்ள வாட்சுமேன் நேராக நின்று கொண்டு கதவை திறப்பதை நீங்கள் ஓட்டலுக்கு செல்லும் போது பார்த்து இருப்பீர்கள். அவர் உடலை வளைத்துக் கொள்ளாமல் மணிக்கணக்காக நிற்கிறார். அதனால் அவர் சோர்வு அடைவதில்லை.

நல்ல முறையில் உட்கார்ந்திருப்பது மன அழுத்ததையும் ஏற்படுத்தாது. பெரும்பாலானோர் இவ்வாறு நல்ல முறையில் உட்கார்வதற்கு சோம்பல் படுவார்கள்.

ஒரு சர்வேயின்படி '75% மக்கள் சரியான முறையில் உட்கார்வதில்லை ' என தெரிய வந்துள்ளது. நவீன எந்திர உலகில் ரோலிங் சேர், குஷன் இருக்கைகள் உள்ள தியேட்டர்கள் என நாம் நல்ல நிலையில் உட்கார்வதே இல்லை. அனால் ஒழுங்கான முறையில் உட்காராமல் இருப்பதால், நமது முதுகுத்தண்டின் அமைப்பு பாதிக்கப்படும். இது கால் மூட்டுக்களை பாதிக்கும். ஆர்த்ரைட்டிஸ், முதுகுவலி போன்றவை ஏற்படலாம்.

ஒரு நீண்ட கண்ணாடியில், நீங்கள் உட்கார்ந்து இருக்கும் முறையை பார்க்கவும். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் தெரிந்து கொள்ளவும். முதுகுப்பகுதியம், கழுத்தும் நேராக இருக்கும்படி, தலையை நிமிர்த்தி உட்காரவோ.

எனவே இனி நீங்களும் நேராக அமர பழகி கொள்ளவும்.

- - க்ருஹ ஷோபா ஜூன் 2015 இதழில் இருந்து  

Thursday, March 26, 2015

Beans Poriyal

Ingredients:-

Beans - 250 grams(Finely Chopped)

Cumin Seeds - 1 tsp
Mustard Seeds - 1tsp
Curry Leaves - 4 to 5
Red Chillies - 3

Turmeric Power - 1/4 tsp
Grated Coconut - 1/2 Cup

Oil - 1 Tablespoon

Method:-

Wash the beans. Cut the beans into small pieces. While You Steam Idlies, You Can also steam beans. Place the chopped beans in another plate in Idlie Cooker. Now Take the cooked beans and keep it aside.

Heat the oil in a kadai Add cumin seeds, Mustard Seeds & Curry Leaves, When the seeds crackle add  red chillies.  Add Cooked beans and saute it.
Add Grated Coconut . Cook it in sim for 5 minutes. Now Beans poriyal is ready.
You can serve this simple dish with rice/chapathi.

Wednesday, March 25, 2015

Bhindi Masala

Today I cooked Bhindi masala as side dish for curd rice,dosai & Chapathi.. This Side dish is recommended by my sister-in-law.  Actually  Somebody brought this recipie for lunch in her office. She shared this recipie with me. So, Today I tried  this Bhindi masala as side dish for curd rice.

Ingredients:-

Onion -1(Sliced)
Tomato - 1(Chopped)
Green Chillies - 2 Slit
Ladies finger - 250 grams

1 tsp oil - for frying bhindi

For Spice Powder:-

Chilli Powder - 1/2 tsp
Cumin Powder - 1/2 tsp
Coriander Powder - 1 1/4 tsp
Turmeric Powder - 1/4 tsp
Garam masala - 1/4 tsp
Salt - 1 1/2 tsp


For Seasoning:-

Oil - 2 1/2 tsp
Cumin Seeds - 1 tsp
Mustard Seeds - 1 tsp

Wash lady's finger and cut it into large pieces as we cut it for Sambar.  Heat Oil and Saute lady's finger. when it comes to brown, take it and keep it aside.

In another pan, heat oil, add mustard seeds & cumin seeds. When it splutters, add onions, green chillies, Tomato, Spice Powder and cook it till the tomato gets mushy.

Now add lady's finger , stir it until it becomes soft.

 It is a perfect side dish for Chapathi, rice, dosa.







Tuesday, March 24, 2015

Mushroom 65



Today I cooked this mushroom 65 with 100% organic mushroom.. 

Nutritional info

Calories 34
Carbohydrates 3g(1%)
Fat 2g(3%)
Protein 2g(4%)
Saturated Fat 0g(1%)
Sodium 10mg(0%)
Polyunsaturated fat 0 g
Fiber 1 g(5%)
Monounsaturated Fat 1 g
Cholesterol 0

Ingredients :
Oyster Mushrooms (Sippi Kaalaan) - 250 gms
Onion -1 no. or 6 Shallots(use Shallots if possible for a better taste)
Green Chillies - 5 nos
Curry Leaves - handful
Turmeric Powder - a pinch
Chilli Powder - 1 tsp or garam masala
Mustard and Urad Dal - 1/2 tsp(for tempering)
Salt to taste
Oil - 3 tbspns

Method :
Wash and tear mushrooms into small pieces using your hand. Do not discard the stem.  Heat oil in the pan.  When the oil is hot do the tempering using mustard and urid dhal.  When the mustard seeds splutter and the urid dhal turns brown add the sliced onions, cut green chillies, curry leaves, a pinch of turmeric and enough salt.  Saute well until the onion acquires golden colour.  At this stage, add chilli powder or garam masalaand oyster mushrooms. Saute them well. Don't add water/  Oyster mushroom have enough water content.  Simmer the flame and fry until they become golden and crispy.  A very attractive , taste fry will be ready in minutes.

Taste enhancing tips for this recipie :-I added Sweet chillie sauce as a taste enhancer. Make it as simple as possible to relish the real mushroom taste.  If you have chicken 65 masala, you can use it for getting that unique colour, taste and flavour. You can also name it as mushroom 65.. Happy Cooking !!!


Monday, March 23, 2015

Pacharisi Kozhukatai

I like this saltless  kozhukatai to a big extent.. On karthigai days , my amma makes this finger shaped  kozhukatai  for Karthigai , Avvaiyar viratham & Ganesh Chathurthi. We make kozhukatais according to our creativity.  Anyway Aachi usually says number of dheepam kozhukatais made should be equal to number of members in our family. During Karthigai, plates with this agal vilakku(kozhkatai) and this finger shaped kozhukatai plays a big role from my childhood. My amma actually had this habit. She takes the finger shaped kozhukatai one by one, heats it in agal vilakku (kozhkattai) and she will say “what a taste!” . On seeing this, I tried it to do always during these festive seasons. Of course, I love this taste while eating with coconut bite.
Ingredients:-
Rice flour – 1 cup

Grated Coconut – 1/4 Cup

Water – according to the quantity of rice flour
Gingely oil – 1 teaspoon

Method :-
Make a dough by mixing  water with the rice flour & Grated Coconut . 

For softness you can add gingely oil to make the dough soft. Make the kozhukatais with the dough according to your creativity.
Take  water  in a pan. Let it boil for 2 to 3 minutes. Add kozhukatais to the boiled water.
 After some time, kozhukatais can be taken from the pan. 
Don’t  steam it for a long time because kozhukatai will become rough. 
This saltless kozhukatai is ready to be served with grated coconut..





Sunday, March 22, 2015

Amma Sambhar

Amma Sambhar

This is not Amma Sambaar that we mean everything in Tamil nadu.. This is my amma sambar which I will say no other sambar can beat the taste of my amma sambar.. Like others, I don't know cooking during my teenage days.. I tried sambar recipies from cooking books & from TV Programmes,, etc etc. But the authentic sambar which my mother makes is always appreciated by others. So, I noted down the recipie in my cooking diary with the title "Amma Sambar".


Ingredients:-
Toor Dal - 1 Cup
Fenugreek Seeds - 1/2 Teaspoon
Asafoetida - 1/4 Teaspoon
Mustard Seeds - 1/2 Teaspoon
Curry Leaves - 15 Curry Leaves
Drumstick - 1 cup
Small Onion - 5
Coriander Leaves - bunch of chopped leaves
Green Chillies - 2
Ladys Finger - One cup
Tomato - 1 Large size
Tamarind - 1/2 Lime Sized
Turmeric Powder - 1/4 Teaspoon
Sambar Powder - 2 Teaspoons Powder
Chilli Powder - 1/4 Teaspoon Powder
Salt - 2 1/2 Teaspoon
Oil - 2 Teaspoon

To Grind:-
Garlic – 1
Small Onion -3
Cumin Seeds – 1 Teaspoon
Coconut – 4 tsp of Grated Coconut or 1 chill coconut as we say

Method :- 
Soak the tamarind for half an hour in 2 cups of warm water. Take 1 cup of Tamarind juice from this. Cut the tomato and drumstick in to small pieces.
Add Chilli Powder, Sambar Powder, Turmeric Powder, Asafoetida, Salt, Drumstick & Tomato to the tamarind extract  and keep aside.
Now Clean the dal.  Add 2 cups of water to the dal in  a cooker. Leave it to 6 to 7 Whistles. Now mash it well and keep aside.
In a separate pan, heat oil. Once the oil is hot, add the green chillies, Ladies finger,  mustard seeds, curry leaves, fenugreek and saute it for 2 minutes. Add the 5 small onions, saute it. Pour the tamarind extract and let it boil. When it is boiling well, add dal to the mixture. Allo this to boil for 5 minutes.
Grind the given ingredients in mixie jar and add it to the sambar at the final stage.  Now add this coconut mixture to the sambar and remove it from heat. Garnish with chopped coriander leaves and Serve it..







Monday, March 16, 2015

சாக்லேட்


குழந்தைப்பருவத்தில் இருந்தே சாக்லேட்னா அவ்ளோத்துக்கு பிடிக்கும். அதுவும் வெளிநாட்டில் இருந்து யாராவது சாக்லேட் வாங்கிட்டு வந்தாங்கன்னா என்னவோ அந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்கும். ஆனால் நம்ம ஊரில் இம்போர்ட்டட்  சாக்லேட் வாங்கினால் ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறதே என தோன்றும். ஊட்டியில் ஹோம் மேட் சாக்லேட் ரொம்ப பேமஸ்னு சொல்வாங்க. ஊட்டி போறவங்க கண்டிப்பா ஹோம் மேட் சாக்லேட் வாங்காமல் ஊருக்கு கிளம்ப மாட்டாங்க.. அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சிக்காக சாதனைப்பெண்கள் இன்டர்வியூ செய்யும் போது, சாக்லேட் பிசினஸ், ஹோம் பேக்கரி வைத்திருக்கிறேன் என்று சொல்றப்போ எப்படியாவது இதுவும் நம்ம பண்றோம் அப்டின்னு அடிக்கடி யோசித்திருக்கிறேன். சரி வீட்டில் சாக்லேட் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.  என்னுடைய முதல் முயற்சியே சக்சஸ் .. சாக்லேட் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருள்கள்:-

பட்டர்  - 1/4 டம்ளர்
சீனி    -  1  டம்ளர்
தண்ணீர்  -  1/2 டம்ளர்
கோகோ பவுடர்  - 5 டேபிள்ஸ்பூன்
மில்க் பவுடர்  - 1 1/4 டம்ளர்

செய்முறை :-


கோகோ பவுடரையும், மில்க் பவுடரையும் நன்றாக கலந்து கொள்ளவும்


தண்ணீரில் சீனி சேர்த்து ஒற்றை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்
இறக்குவதற்கு முன்னர் பட்டரை சீனிப்பாகில் சேர்த்து சிம்மில் வைத்து பொங்கிய உடன் இறக்கவும்

கோகோ பவுடர், மில்க் பவுடர் கலவையை எடுத்து, இந்த சீனிப்பாகில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மிக்ஸ் செய்து வைக்கவும்.. இந்த மிக்ஸ்ஐ பட்டர் தடவிய ஒரு தட்டில் ஊற்றி ஒரு 15 நிமிடம் ப்ரிட்ஜ்ல் வைக்கவும். 

வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சரில் ஒரு 15 நிமிடங்கள் வரை வைத்து எடுத்து பின், குக்கீஸ் கட்டர் வைத்து விரும்பிய வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்.

கடைகளில் குக்கீஸ் கட்டர் 8 shapes ஒரு boxல் இருக்கும். வெறும் 20 ருபாய் தான். Heart shape, round shape, flower shape  என 8 வடிவங்களில் கிடைக்கும். இந்த குக்கீஸ் கட்டர் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். வாங்கி வைத்துக்கொண்டால் சாக்லேட் செய்ய வசதியாக இருக்கும்,.சாக்லேட் ரெடி.. விரும்பினால் ஏதாவது சாக்லேட் பேப்பரில் சுற்றி அழகாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.