Tuesday, August 15, 2017

தினம் ஒரு நெல்லிக்காய்

புளிப்பு சுவைகளிலேயே மிகவும் நன்மையை தருவது நெல்லிக்காய் தான் என பண்டை கால ஆயுர்வேத நிபுணர் சுஸ்ருதர் சொல்லியிருக்கார். ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது 20 ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு சமம் என சொல்லுவார்கள். பார்வை மங்கல், கண் அயர்ச்சியை போக்கும் ஷக்தி நெல்லிக்காய்க்கு இருக்கிறது.  ஒரு நெல்லிக்காயும், சம அளவிலான தங்கத்தையும் ஒப்பிட்டால், தங்கத்தை விட நெல்லிக்காய் தான் அதிக பலன் தரக்கூடியது என வட மொழிப்பாடல் ஒன்று கூறுகிறது. நமது உடல் பலவீனம் அடைய காரணம் என்ன என்று பார்த்தால், பழைய செல்களும், திசுக்களும் அழிந்து, புதுப்புது செல்களும், திசுக்களும் உருவாவது தான் காரணம். தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலின் செல்களும், திசுக்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மருந்து போன்றது. நமது வட மொழி நூல்கள் நெல்லிக்காயை சர்வ உத்தம பழம், அதாவது பழங்களில் எல்லாம் சிறந்த பழம் என கூறுகிறது. அதனால் நெல்லிக்காய தினம் உணவில் ஜாம், ஊறுகாய், ஜூஸ் என ஏதாவது ஒரு வடிவத்தில் எடுத்து கொள்ளலாமே !

No comments:

Post a Comment