Saturday, May 15, 2010

த‌மிழ‌க‌த்தில‌ இனிமேல் க‌ருத்தோ க‌ருத்து:


நேற்று நடிகை குஷ்பூ தி.மு.க‌. க‌ட்சியில் சேர்ந்து, அப்ப‌ப்பா, அதுக்கு கூட‌ ச‌ன் நியூஸ் தொலைக்காட்சியில் குஷ்பூவுட‌ன் ஒரு சிற‌ப்பு பேட்டி. அதுவும் திரும்ப‌ திரும்ப‌ போட்டு ந‌ம்ம‌ள கொடுமைப்ப‌டுத்த‌றாங்க‌. குஷ்பூ இந்த‌ முடிவு எடுத்த‌தில் த‌மிழ் நாட்டு மக்க‌ளுக்கு என்ன‌ ந‌ல்ல‌து ந‌டக்க‌ப்போகுதுன்னு நினைச்சாலே காமெடியா இருக்கு. அந்த‌ பேட்டியில் த‌மிழ்நாடு என‌க்கு நெற‌ய‌ செஞ்சிருக்கு. அதனால‌, நான் த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து ப‌ண்ண‌னும் அப்டின்னுல்லாம் சின்ன‌பிள்ளைத்த‌ன‌மா குஷ்பூ பேசுற‌தையெல்லாம் கேட்ப‌த‌ற்கு சிரிப்பா இருந்த‌து. நாலு பேருக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்க‌னும்னா எதுவுமே த‌ப்பு இல்ல‌ன்னு நாய‌க‌ன் பட‌ பாணியில் அர‌சிய‌லுக்கு வ‌ந்திருக்காங்க‌ அம்ம‌ணி. ஏன் த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து ப‌ண்ண‌னும்னா, ந‌டிக‌ர் சூர்யா மாதிரி அர‌சிய‌லுக்கு வ‌ராம‌லேயே ந‌ல்ல‌து ப‌ண்ண‌லாம்ல...ச‌ரி குஷ்பூ அர‌சிய‌லுக்கு வ‌ந்து அப்ப‌டி என்ன‌ ந‌ல்ல‌து ப‌ண்ண‌ போறாங்க‌? ந‌ல்லா தான் பிழைக்கிறாங்க‌. அப்போ இனிமேல் சீக்கிர‌மே ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு குட்பை சொல்லிட்டு,
கலைஞர் டிவியில் அம்ம‌ணியை பார்க்க‌லாம்...