Saturday, November 18, 2017

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும் 



1987-ல்  இளையராஜா இசையில் வெளிவந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், செண்பகமே செண்பகமே பாடல் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் இவர். 

படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு 
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 

தென்பொதிகை சந்தனமே

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்



செந்தூரப்பூவே பாடலின், பாடல் தொடங்கும் போது, சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘Slow motionல்’ ஓடவிட்டு, படம் பிடித்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவிற்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. அதனால், ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)
தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)
நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)


80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப்  பிரபலமடைந்தது இந்தப் பாடல்.   ‘தும்பி வா’ பாடலின் மெட்டு இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்று . இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்,இந்த 'தும்பி வா' பாடலும் ஒரே மெட்டுதான். இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று. என எங்கேயோ அவர் பகிர்ந்ததாக ஞாபகம்.


படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது 
சந்தத்தில் மாறாத நடையோடு என் 
முன்னே யார் வந்தது 
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்தள் மலரை 
நீ சொன்னால் நான் நம்பவோ 
கால் என்றே செவ்வாழை இணைகளை 
நீ சொன்னால் நான் நம்பி விடவோ 
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

அந்திப்போர் காணாத இளமை 
ஆடட்டும் என் கைகளில் 
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் 
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை 
கொஞ்சம் தா..ஆ… 
கொஞ்சத்தான்..ஆ.. 
கண்ணுக்குள் என்னென்ன நளினம் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

ஆடை ஏன் உன் மேனி அழகை 
ஆதிக்கம் செய்கின்றது 
நாளைக்கே ஆனந்த விடுதலை 
காணட்டும் காணாத உறவில் 
கை தொட்டும்...ஆ 
மெய் தொட்டும்..ஆ 
சாமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது