Wednesday, January 18, 2012

புதிர் விளையாட்டு :



ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவே முடியலை. செம வேலை. அதனால் சில பல நாட்களுக்கு அப்பறமா 2 புதிர்கள் ...

1)ஒரு ராஜா அவரோட சேனாதிபதிகிட்ட நூறு ரூபாயை கொடுத்து , படைக்கு தேவையான குதிரை, கழுதை, யானை எல்லாம் வாங்கிட்டு வர சொல்றார். ஒரே ஒரு கண்டிஷன், 100 ரூபாய்க்கு 100 உருப்படி வாங்கிட்டு வரணும் அப்டின்றது தான். 1 யானை 5 ரூபாய் , 1 குதிரை 75 பைசா , 1 கழுதை 25 பைசா , எத்தனை வாங்கி இருப்பார்?

2) நேற்று நான் ஒரு பழக்கடைக்கு போயிருந்தேனா, அங்கே ஒரு போர்டுல பழங்களோட விலையை எழுதி வச்சிருந்தாங்க.
ஆரஞ்சு - 12 ரூபாய்
அன்னாசி - 12 ரூபாய்
திராட்சை - 12 ரூபாய்
இது எதோ ஒரு லாஜிக்ல , எதோ ஒரு அடிப்படையில் பழங்களின் விலையை பிக்ஸ் பண்ணி இருக்காங்க. அதே அடிப்படையில் பார்க்கிறப்போ மாம்பழம் எவ்வளவுன்னு அந்த போர்டுல போட்டிருக்கும்? (இது கணக்கு இல்லை, ஆனால் கணக்கு மாதிரி)

ட்ரை பண்ணி பாருங்க...