Sunday, November 19, 2017

80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பட்டின பிரவேசம் படத்தில், வான் நிலா நிலா அல்ல பாடல் எழுதும் போது நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் 

M.S.விஸ்வநாதனிடம் கவிஞர் கண்ணதாசன் "விசு! எங்கே அந்த டியூனை வாசி!’ என சொல்ல, விஸ்வநாதன்  ‘லா...லல்லா..லல்லா...’ என்று ட்யூனை பாடிக்காட்ட, கண்ணைமூடிக்கொண்டு சில வினாடிகள் சிந்தித்த கவிஞரின் வாயிலிருந்து வார்த்தைகள்வந்து கொட்டின. ‘வான் நிலா நிலா அல்ல; உன் வாலிபம் நிலா...’ பாட்டு வரிகள் தொடர்ந்தன. முதல் சில வரிகள்மட்டுமில்லை. அடுத்தடுத்த வரிகளும் கூட ‘லா’ வில்தான் முடிந்தன.
அடுத்து கவிஞரைக் கிண்டலடிக்கும் நோக்கத்தோடு, ‘எல்லா லா வும்சொல்லிட்டீங்க. இன்னும் நாலே நாலு ‘லா’தான் பாக்கி’ என்றார் M.S.விஸ்வநாதன். ‘என்னடாசொல்லறே?’ என்றார் கவிஞர் ஒன்றும் புரியாமல். ‘புரியலையா? ஃபாதர் -இன்-லா, மதர் -இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லான்னு இன்னும் நாலே நாலு‘லா’தான் உங்க பாட்டுல வரல!’ என்று  M.S.விஸ்வநாதன் சொன்னதும், கவிஞர் பலமாகச் சிரித்துவிட்டார்.                         

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா பட்டிலா புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா ஊடலா கூடலா 
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா 
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் 
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா


வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..




80'ஸ் ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

மௌன ராகம் படத்தில் நிலாவே வா பாடலை எஸ்.பி.பி. பாடும் போது, மணிரத்னம், இளையராஜா ஆகியோர் ஸ்டுடியோவில் இல்லாததால் என்ன விதமான சூழலில் பாடல்  படமாக்கப்படும் என தெரியாமலேயே பாடியிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னர் இந்த பாடலை திரையில் பார்த்து விட்டு, "இது சோகப்பாடலா என்னிடம் சொல்லவே இல்லையே" என கூறினாராம் அவர். 



நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

காவேரியா கானல் நீரா - 
பெண்மை என்ன உண்மை ? 

முள்வேலியா - முல்லைப்பூவா .
சொல்லு - கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும்சிறு்சி பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை 
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை ..

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட 
சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே .
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

நிலாவே வா .. 
செல்லாதே வா ..

என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா .. 
செல்லாதே வா ..
என்னாளும் உன் பொன்வானம் நான்

Saturday, November 18, 2017

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும் 



1987-ல்  இளையராஜா இசையில் வெளிவந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், செண்பகமே செண்பகமே பாடல் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் இவர். 

படம் : எங்க ஊரு பாட்டுகாரன்
பாடல் : செண்பகமே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே, மனோ

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு 
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே 

தென்பொதிகை சந்தனமே

80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்



செந்தூரப்பூவே பாடலின், பாடல் தொடங்கும் போது, சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் ஸ்ரீதேவியை ‘Slow motionல்’ ஓடவிட்டு, படம் பிடித்திருப்பார்கள்.
அந்தக் காலத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சிகளைப் படம்பிடிக்கும் கேமராவை வாங்கும் அளவிற்கு அந்தப் படத்தின் பட்ஜெட் இடம் கொடுக்கவில்லை. அதனால், ஸ்ரீதேவியை மெதுவாக ஓடச் சொல்லி, படம் பிடித்திருப்பார்கள். நமக்கு, ‘ஸ்லோ மோஷனில்’ ஸ்ரீதேவி ஓடுவது போலத் தெரியும். இந்தத் தகவலை கமலே மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 
படம்: 16 வயதினிலே
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)
தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
என்ன இனிக்கிது அந்த நினைவிதுவே
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)
நீலக்கருங்குயிலே தென்னஞ் சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)


80's ரசித்த பாடல்களும், ரசித்த விஷயங்களும்

பாலுமகேந்திரா எடுத்த மலையாளப் படமான ‘ஓளங்க’ளில் (அலைகள்) இடம்பெற்றுப்  பிரபலமடைந்தது இந்தப் பாடல்.   ‘தும்பி வா’ பாடலின் மெட்டு இளையராஜாவின் புகழ்பெற்ற மெட்டுகளில் ஒன்று . இந்தப் பாடல் வெளியான அதே ஆண்டு தமிழில் வெளியான ‘ஆட்டோ ராஜா’ என்ற விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ‘சங்கத்தில் பாடாத கவிதை’ பாடலும்,இந்த 'தும்பி வா' பாடலும் ஒரே மெட்டுதான். இளையராஜாவின் மெட்டுகளிலேயே, பல மொழிகளில் அதிக முறை பயன்படுத்த மெட்டு இதுவாகத்தான் இருக்கும். காப்பி ராகத்தில் அமைந்த இந்த மெட்டுதான், இளையராஜாவுக்கும் தன் இசையில் மிகவும் பிடித்த மெட்டுகளில் ஒன்று. என எங்கேயோ அவர் பகிர்ந்ததாக ஞாபகம்.


படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது 
சந்தத்தில் மாறாத நடையோடு என் 
முன்னே யார் வந்தது 
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

கையென்றே செங்காந்தள் மலரை 
நீ சொன்னால் நான் நம்பவோ 
கால் என்றே செவ்வாழை இணைகளை 
நீ சொன்னால் நான் நம்பி விடவோ 
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

அந்திப்போர் காணாத இளமை 
ஆடட்டும் என் கைகளில் 
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் 
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை 
கொஞ்சம் தா..ஆ… 
கொஞ்சத்தான்..ஆ.. 
கண்ணுக்குள் என்னென்ன நளினம் 
காலத்தால் மூவாத உயர் தமிழ் 
சங்கத்தில்….. 

ஆடை ஏன் உன் மேனி அழகை 
ஆதிக்கம் செய்கின்றது 
நாளைக்கே ஆனந்த விடுதலை 
காணட்டும் காணாத உறவில் 
கை தொட்டும்...ஆ 
மெய் தொட்டும்..ஆ 
சாமத்தில் தூங்காத விழியின் 
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் 
அங்கத்தில் யார் தந்தது

Sunday, October 29, 2017

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....



 எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம்.நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும். அதனால எப்பவும் நல்லதையே யோசிங்க. 

Sunday, October 1, 2017

டிப்ஸ் டிப்ஸ்

டிப்ஸ் டிப்ஸ்

காரக்குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா ?
வறுத்த வேர்க்கடலை பருப்பை பொடி செய்து , கார குழம்பில் கலந்து விட்டால் காரம் குறைந்து சுவையான குழம்பாகி விடும்.

தவாவில் பிசுக்கு போகவில்லையா ?
சூடான தயிர் அல்லது சூடான மோரை தவாவில் ஊற்றி, ஆறியபின் தேய்த்து கழுவ, தவா பளபளவென இருக்கும்.

ஆரஞ்சு டீ வேண்டுமா ?
டீ தயாரித்ததும் அதில் ஓரிரு ஆரஞ்சு பழ சுளைகளை போட்டால் டீ மணமும் சுவையும் கொள்ளை கொள்ளும்.

ஜீரணத்தை தூண்டும் சப்பாத்தி:-
கோதுமை மாவில் சப்பாத்தி செய்யும் போது, நாலு கரண்டி மோருடன், சிறிது மிளகு, சீராக பொடிகளை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

ரவையை மாத்துங்க :-
அரிசி, உப்புமா, பிடிகொழுக்கட்டை செய்யும் போது, அரிசி ரவைக்கு பதிலாக கோதுமை ரவையை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து உபயோகித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாகும்.

அரைத்த மாவு தோசை :-
அரைத்த மாவு தோசை செய்யும் போது அதில் சிறிது மோர்விட்டு மாவை கரைப்பது வழக்கம். மோர் இல்லாத சமயத்தில் எலுமிச்சை சாறை விட்டு சுவை சேர்க்கலாம். அதுவும் இல்லாத சமயத்தில் தக்காளியையும், பச்சை மிளகாயையும் சுவைக்கேற்ப அரைத்து விட்டு மாவை கரைத்தால் அலாதி ருசி.

சாத கட்லட் :-
வெஜிடபிள் கட்லட் செய்யும் போது கைப்பிடி அளவு சாதத்தை நன்கு மசித்து சேர்த்து கட்லட் செய்தால், கட்லட் மிருதுவாக இருப்பதோடு அளவும் கூடுதலாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் சூப் :-
காய்கறிகளை வேக வைத்த நீரை கொட்டி விடாமல் மிளகு, சீரக பொடிகளுடன் அரை டீஸ்பூன் வெண்ணெய், தேவையான உப்பு சேர்ந்தால் சூப்பரான சூப் ரெடி ..

பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துவிட்டு, கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு பதினைந்து நிமிடம் மூடி வைத்தால் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவும் செய்யாது. ஒன்றோடு ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.

வெங்காயம் நறுக்கிய அரிவாள்மனை அல்லது கத்தியில் ஒரு வெற்றிலையை எடுத்து கசக்கி தேய்த்தால் வாடை போய் விடும்.

பனங்கிழங்கு கிடைக்கும் போது, சுவையான சத்து கஞ்சி மாவு தயார் செய்து வைத்து கொள்ளலாம். குச்சி கிழங்கை தோல் நீக்கி, வில்லைகளாக்கி உலர்த்தி சிறிது ஏலக்காய் சேர்த்து மிக்சியில் பவுடராக்கி கொள்ளவும். அந்த மாவில் கஞ்சி தயாரித்து பால் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான மணமான கஞ்சி இது.

பீட்ரூட் தோல்களை கனகாம்பரம் பூச்செடிக்கு உரமாக போட்டால், பூக்கள் ஊதா நிறம் கலந்த சிவப்புடன் அழகாக பூக்கும்.

Saturday, August 19, 2017

பாடலும் கதையும் - சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்களில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் " சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாடல் கம்போசிங் செய்ய அவர் எடுத்த நேரம் மிக மிக குறைவு.. அனால் சில பாடல்கள் கம்போஸ் செய்ய ஐந்து மாதங்கள் வரை ஆகியுள்ளது என அவர் கூறியுள்ளார்.





பாடலும் கதையும்

16 வயதினிலே படத்தில் வரும் "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா" - இந்த பாடலை பாட வேண்டிய பாட்டு தான். ஆனால் அவருக்கு அந்நேரத்தில் தொண்டை கட்டிக்கொண்டதால், அந்த பாடலை பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த பாடல் கிடைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய முன்னேற்றம் இன்னும் தாமதப்பட்டிருக்கும் என மலேசியா வாசுதேவன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



இளமையான சருமம் - பின்பற்ற வேண்டியவை

இருபத்தைந்து வயதிற்கு பின், தோலில் கொலாஜன் குறைய ஆரம்பிக்கும். அதனால் தோலை  பாதுகாக்கும் உணவுகளான கொய்யா, பப்பாளி, நெல்லிக்காய், வெங்காயம், எலுமிச்சை என விட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை மறக்காமல் சேர்க்க வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கு, பீட்ருட் தினமும் எடுத்து கொள்ள வேண்டும். அடர் நிறங்கள் அதிகமுள்ள காய்கறிகள், பழங்களை எடுத்து கொள்வது அவசியம், செலினியம் அதிகமுள்ள மஷ்ரூம், துத்த நாகம் அதிகமுள்ள பச்சை கீரைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும். தினமும் ஐந்து எண்ணிக்கையுள்ள பாதாம், முந்திரி, வால்நட் எடுத்து கொள்ள வேண்டும். விட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து பெற வேண்டும். குறணிந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சோப் வாங்கும் போது, PH லெவல் பார்த்து சமநிலையில் உள்ள சோப் வாங்க வேண்டும். தினமும் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உறங்க   செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு தான் தூங்க வேண்டும். மனதை ரிலாக்ஸ்ட்டாக வைத்து கொள்ள வேண்டும். இதை எல்லாம் சரியாக பின்பற்றினால் ஸ்கின் அழகாக இளமையாக இருக்கும்.

Tuesday, August 15, 2017

தினம் ஒரு நெல்லிக்காய்

புளிப்பு சுவைகளிலேயே மிகவும் நன்மையை தருவது நெல்லிக்காய் தான் என பண்டை கால ஆயுர்வேத நிபுணர் சுஸ்ருதர் சொல்லியிருக்கார். ஒரு பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவது 20 ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதற்கு சமம் என சொல்லுவார்கள். பார்வை மங்கல், கண் அயர்ச்சியை போக்கும் ஷக்தி நெல்லிக்காய்க்கு இருக்கிறது.  ஒரு நெல்லிக்காயும், சம அளவிலான தங்கத்தையும் ஒப்பிட்டால், தங்கத்தை விட நெல்லிக்காய் தான் அதிக பலன் தரக்கூடியது என வட மொழிப்பாடல் ஒன்று கூறுகிறது. நமது உடல் பலவீனம் அடைய காரணம் என்ன என்று பார்த்தால், பழைய செல்களும், திசுக்களும் அழிந்து, புதுப்புது செல்களும், திசுக்களும் உருவாவது தான் காரணம். தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலின் செல்களும், திசுக்களும் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இது ஒரு காயகல்ப மருந்து போன்றது. நமது வட மொழி நூல்கள் நெல்லிக்காயை சர்வ உத்தம பழம், அதாவது பழங்களில் எல்லாம் சிறந்த பழம் என கூறுகிறது. அதனால் நெல்லிக்காய தினம் உணவில் ஜாம், ஊறுகாய், ஜூஸ் என ஏதாவது ஒரு வடிவத்தில் எடுத்து கொள்ளலாமே !

Saturday, January 7, 2017

புதிர்கள்

புதிர்கள்
இன்றைய புதிர்
சிகப்பு, வெள்ளை, நீல நிற  கார்கள் திருட்டு போகுது. போலீசார் அருண், வருண், கார்த்திக்  மூன்று  பேரை சந்தேகப்பட்டு கூப்பிட்டு விசாரிக்கிறாங்க.
அருண் வருண் ரெட் கலர் காரை திருடினார்னு சொல்றான்.
கார்த்திக் வருண் வெள்ளை கலர் காரை திருடினார்னு சொல்றான்
வருணிடம் கேட்டால், நான் வெள்ளை கலர் காரையும் திருடலை, சிகப்பு கலர் காரையும் திருடலைன்னு சொல்றான்.
போலீசார் சிகப்பு கலர் காரை திருடினவர் உண்மையை ஒத்துக்கிட்டான்னு சொல்லி மூன்று போரையும் அரெஸ்ட் பண்றங்க. இந்த ஒரு தகவலை வைத்து கொண்டு யார் யார் எந்தெந்த காரை திருடினாங்கன்னு கண்டுபிடிக்க முடியுமா ?