Tuesday, October 27, 2009

சாம்பார் என்ற‌ பெய‌ர் சாம்பாருக்கு எப்ப‌டி வ‌ந்த‌து?


சாம்பார் என்ற‌ பெய‌ர் சாம்பாருக்கு எப்ப‌டி வ‌ந்த‌து?

நெற‌ய‌ வீடுக‌ளில் தின‌மும் சாம்பார் வ‌ச்சே கொல்லுவாங்க‌. நெஜமாவே சாம்பாருக்கு பேர் வ‌ந்த‌துக்கு கார‌ண‌ம் சாம்பாஜி எனும் ஒருத்த‌ர். சாம்பாஜிக்கும், சாம்பாருக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் அப்டின்னா,ம‌ராட்டிய‌ அர‌ச‌ர் ச‌த்ர‌ப‌தி சிவாஜியின் ம‌க‌ன் தான் சாம்பாஜி. ம‌ராட்டிய‌ர்க‌ள் அம்டி அப்டின்ற குழம்பை தான் முத‌ல்ல சாப்டுகிட்டு இருந்தாங்க‌. புளிக்கு ப‌திலாக‌ கோக்கும் அப்டின்ற‌ ஒரு ப‌ழத்தை ப‌ய‌ன்ப‌டுத்தினாங்க‌. அப்ற‌மா, அந்த‌ கோக்கும் கிடைக்காம‌ல் ரொம்ப‌ த‌ட்டுப்பாடாக‌ ஆன‌தால் , புளியை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பிச்சாங்க‌. புளியை க‌ரைச்சு, துவ‌ர‌ம்ப‌ருப்பு, காய்க‌றி இதெல்லாம் போட்டு குழம்பு வ‌ச்சாங்க‌. இந்த‌ குழ‌ம்பை அர‌ச‌வைக்கு விருந்தாளியாக‌ வ‌ந்த‌ சாம்பாஜிக்கு முத‌ல்ல‌ குடுத்தாங்க‌. சாம்பாஜி முத‌லில் சாப்பிட்ட‌தால் சாம்பாருக்கு சாம்பார் அப்டின்னு பெய‌ர் வ‌ந்த‌து.