
காலை வணக்கம்....
தூங்கி எந்திரிச்ச உடனேயே கடமையே கண்ணாக முதல்ல புதிர் கேள்வியைத்தான் போடுறேன். இன்னைக்கு புதிர் கேள்விக்கு போவோமா......
1)ஒரு பயங்கரமான காடு. இந்த காட்டுக்குள்ளே ஒரு பாழடைந்த வீடு இருக்கு. இந்த வீட்டில் ஊர்ல உள்ள எல்லா எலியும் இந்த வீட்டுக்குள்ளே படையெடுத்து ரொம்ப தொல்லை பண்ணுது. ஆனால் இந்த வீட்டில் ஏகப்பட்ட பூனைகளை வேற வைத்திருக்காங்க. இரு ந்தாலும் ஒரு எலி கூட பூனையை பார்த்து பயப்பட மாட்டேங்குது. ஏன்?
2)எப்பவுமே நம்ம துவைத்து துணியை காய போடறப்போ துணி கீழே விழக்கூடாதுன்னு துணிக்கு க்ளிப் போடுவோம்ல? அதே மாதிரி துணியை காயப்போடட்டு ராணி துணிக்கு க்ளிப் போடறாங்க. ஆனால் மறு நாள் வந்து பார்க்கிறப்போ எல்லா க்ளிப்பும் கீழே விழுந்து கிடக்கு. ஆனால் இவங்களோட பக்கத்து வீட்டு மாலா ரொம்ப பந்தா பண்ணுவாங்களாம், ஏன்னா, அவங்க வைத்த க்ளிப் மட்டும் அதே இடத்திலேயே இருக்குதாம். எப்படி?
ட்ரை பண்ணுங்க.
மீண்டும் இன்று மாலை ஹெல்த் நியூஸூடன் சந்திப்போமா?