Saturday, September 7, 2013

இல்லத்துக்குள் முடங்காத அரசிகள் :-

வெற்றியைத் தந்த கனிவும் பொறுமையும்!

வெளிநாட்டில் தங்கிப் படித்த என் மகனைப் பார்க்க ஃபிளைட் டிக்கெட் புக் செய்வதற்குப் போனேன். அதற்காக டிராவல் ஏஜென்ஸியில் அரை மணிநேரம் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புதான், இன்று என்னை டிராவல் ஏஜென்ட்டாக்கி இருக்கிறது�� என்கிற சரோஜினி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. கணவர், குழந்தைகள் என வீடே உலகமாக இருந்தவர், மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பிசினஸ் வுமனாக மாறியது சக்ஸஸ் ஸ்டோரிதானே. அதை அவரே சொல்கிறார்...
 சென்னையின் தென்கோடியில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பேர் சொன்னாலே தெரிகிற அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் சரோஜினி. �வீட்டில் ஒரு கம்ப்யூட்டரை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா?� என்ற நம் கேள்விக்கு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு பேசினார் சரோஜினி.��என் சொந்த ஊர் மதுரை. திருமணத்துக்குப் பின்னாலதான் சென்னை எனக்கு அறிமுகம். என் கணவர் வக்கீல்ங்கறதால அவருக்கு நிறைய லெட்டர்கள், டாக்குமென்ட்கள் டைப் செய்து தர்ற வேலை இருந்தது. அவருக்கு உதவியா இருக்கறதுக்காக எங்க வீட்டு பக்கத்துல இருந்த கோத்தாரி அகாடமியில் செக்ரட்டரி கோர்ஸ் படித்தேன்.
அதே அகாடமியில் வேலையும் செய்தேன். என் பொண்ணு பிறந்ததும் அவளுக்காக வேலையை விட்டேன். அடுத்து பையன் பிறந்தான். அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போனதும் வீட்ல சும்மாதானே இருக்கோம்னு ஜெர்மன், இந்தி மொழிகளைக் கத்துக்கிட்டேன். எல்.ஐ.சி ஏஜென்ட் ஆனேன். அதோடு ஒரு தனியார் நிறுவனத்துல ஏஜென்சி எடுத்து அவங்களோட தயாரிப்புகளை விற்றேன். அதுல ஓரளவுக்கு லாபம் வந்தது. மத்தவங்களோட துணை இல்லாம என்னால சாதிக்க முடியும்னு அப்பதான் தோணுச்சு. அந்த நேரம் பார்த்து நாங்க வேற ஏரியாவுக்கு குடிபோனோம். என்னோட பழைய வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்கமுடியாத நிலையில், புதுசா வந்த ஏரியாவில நிறைய பேரை நண்பர்களாக்கினேன்.
ஆனா முன்ன இருந்த அளவுக்கு பிசினஸ்ல லாபம் இல்லை. இதுக்கு இடையில பசங்களும் ஸ்கூல் படிப்பை முடிச்சு காலேஜ்ல சேர்ந்தாங்க�� என்றவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது, முதலில் விவரித்த காத்திருப்பு சம்பவம்.
��ஆஸ்திரேலியாவில படிச்சிட்டிருந்த என் பையனைப் பார்க்கறதுக்காக டிக்கெட் புக் பண்ண நானும் என் பொண்ணும் ஒரு டிராவல் ஏஜென்ஸிக்கு போனோம். கிடத்தட்ட அரை மணிநேரம் அங்கே இருந்தேன். அப்போ அங்க டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கவனிக்கற சந்தர்ப்பம் கிடைச்சுது. வீட்டுக்கு வந்த பிறகும் அந்த விஷயங்களே மனசுல ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஏற்கனவே என் கணவருக்கு டெல்லி, மும்பை, மதுரைனு பல ஊர்களுக்கு டிக்கெட் புக் செய்த அனுபவமும் எனக்கு இருந்ததால நாமே டிக்கெட் புக்கிங் மற்றும் ஃபாரின் டூர் ஏஜென்சி தொடங்கலாமேன்னு தோணுச்சு. ஆஸ்திரேலியாவுல இருந்து திரும்பினதுமே என் எண்ணத்தை கணவரிடம் சொன்னேன். அவரும் உற்சாகப்படுத்த, உடனே டூர்ஸ் மற்றும் டிக்கெட்டிங் தொடர்பான 3 மாத ஐ.ஏ.டி.ஏ (மிகிஜிகி) படிப்பில் சேர்ந்தேன். முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர்.
எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக படித்து அந்த வகுப்பின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் ஒரு டிராவல் ஏஜென்ட்டுக்கு சப் ஏஜென்ட்டாகப் பணியைத் தொடங்கினேன். முதலில் யாருக்கு டிக்கெட் புக் செய்து தொழிலைத் தொடங்குவது என யோசித்தேன். எங்களோட ஃபிரெண்ட்ஸையே வாடிக்கையாளர்களாக மாற்றினேன்�� என்றவர், ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்திருக்கிறார்.

��2008-ல் முதல் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கினேன். அந்த 8 நாட்கள் சீனா சுற்றுலா திட்டம் ஓரளவுக்கு லாபம் தந்தது. தொட்டதுமே லாபம் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த ஆண்டே 9 நாட்கள் கொண்ட சீனா சுற்றுலா மற்றும் 7 நாட்கள் ஜப்பான் சுற்றுலா இரண்டையும் நடத்தினேன். சீனா சுற்றுலாவுக்காக டிக்கெட் புக் பண்ணும்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூலித்துவிட்டதால், அவர்களிடம் மேலும் பணம் கேட்ட முடியாத சூழ்நிலை. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நாங்களே ஏற்றுக்கொண்டோம். இதனால் கிட்டத்தட்ட 60,000 ரூபாய் நஷ்டம். ஆனால் அப்போது கிடைத்த நல்ல பெயரால் எங்கள் நட்பு வட்டத்தைத் தாண்டி வியாபார எல்லை விரிவடையத் துவங்கியது. தொடர்ந்து சிங்கப்பூர், -மலேசியா, எகிப்து, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு பலரை டூர் அழைத்துச் சென்றோம். எகிப்து சுற்றுலா திட்டத்துக்குப் பிறகு ஐரோப்பா சுற்றுலா டூர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதற்காக ஐரோப்பா ஏஜென்ட்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினோம். அப்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் ஐரோப்பா முழுவதும் புகை மண்டலமானது.
அதனால் பலர் ஐரோப்பா சுற்றுலாவுக்கு வர மறுக்க, அந்தத் திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது. ஆனால் எங்கள் ஐரோப்பா ஏஜென்ட், முன்பணத்தை திரும்பத் தரவே இல்லை. அதையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.
இதுபோன்ற பண விவகாரங்களை விடவும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திரும்பக் கூட்டி வருவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்ட சுற்றுலா என்பதால் உள்ளூர் சுற்றுலா ஏஜென்ட்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அன்பாகவும், பொறுமையாகவும் ஹேண்டில் செய்ய வேண்டும். சிலர் காலையில் தங்களது இஷ்டத்துக்கு எழுந்திருப்பார்கள். சிலர் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வேறு சிலர் உணவு விஷயத்தில் சற்று கறாராக இருப்பார்கள். இப்படி அனைவரையும் சமாளித்து அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலாவை அனுபவித்தால்தான் அடுத்தமுறையும் தேடி வருவார்கள். அதனால் கனிவும் பொறுமையும் எப்போதும் எங்களிடம் இருக்கும்.
தவிர அனைத்து விஷயங்களையும் வீட்டில் அமர்ந்தபடியே இன்டர்நெட் மூலம் முடித்துவிடுவதால் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடிகிறது. மாறாத புன்னகையும் கனிவும்தான் எங்களின் வெற்றிக்குக் காரணம்�� என்கிற சரோஜினி, டூர் சம்பந்தமான போன் விசாரிப்புகளுக்கு பொறுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியபடியே நமக்கு விடை தருகிறார். 
& ஸ்ரீஹரி

முதல்நாள் வகுப்பறைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த மாணவர்கள் அனைவருமே -21 வயதுக்குள் இருந்தனர். எனக்கு அப்போ 44 வயது. என் மகன் வயதுள்ளவர்களோடு சேர்ந்து படிக்க மிகவும் கூச்சமாகவும் சற்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக படித்து அந்த வகுப்பின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். முதலில் ஒரு டிராவல் ஏஜென்ட்டுக்கு சப் ஏஜென்ட்டாகப் பணியைத் தொடங்கினேன். முதலில் யாருக்கு டிக்கெட் புக் செய்து தொழிலைத் தொடங்குவது என யோசித்தேன். எங்களோட ஃபிரெண்ட்ஸையே வாடிக்கையாளர்களாக மாற்றினேன்�� என்றவர், ஆரம்பத்தில் பல சரிவுகளைச் சந்தித்திருக்கிறார்.


��2008-ல் முதல் வெளிநாட்டு சுற்றுலா திட்டத்தைத் தொடங்கினேன். அந்த 8 நாட்கள் சீனா சுற்றுலா திட்டம் ஓரளவுக்கு லாபம் தந்தது. தொட்டதுமே லாபம் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்த ஆண்டே 9 நாட்கள் கொண்ட சீனா சுற்றுலா மற்றும் 7 நாட்கள் ஜப்பான் சுற்றுலா இரண்டையும் நடத்தினேன். சீனா சுற்றுலாவுக்காக டிக்கெட் புக் பண்ணும்போது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான கட்டணத்தை உயர்த்தியது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயித்து பயணிகளிடம் வசூலித்துவிட்டதால், அவர்களிடம் மேலும் பணம் கேட்ட முடியாத சூழ்நிலை. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நாங்களே ஏற்றுக்கொண்டோம். இதனால் கிட்டத்தட்ட 60,000 ரூபாய் நஷ்டம். ஆனால் அப்போது கிடைத்த நல்ல பெயரால் எங்கள் நட்பு வட்டத்தைத் தாண்டி வியாபார எல்லை விரிவடையத் துவங்கியது. தொடர்ந்து சிங்கப்பூர், -மலேசியா, எகிப்து, நியூசிலாந்து என பல நாடுகளுக்கு பலரை டூர் அழைத்துச் சென்றோம். எகிப்து சுற்றுலா திட்டத்துக்குப் பிறகு ஐரோப்பா சுற்றுலா டூர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதற்காக ஐரோப்பா ஏஜென்ட்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தினோம். அப்போது ஐஸ்லாந்து எரிமலை வெடித்ததால் ஐரோப்பா முழுவதும் புகை மண்டலமானது.
அதனால் பலர் ஐரோப்பா சுற்றுலாவுக்கு வர மறுக்க, அந்தத் திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது. ஆனால் எங்கள் ஐரோப்பா ஏஜென்ட், முன்பணத்தை திரும்பத் தரவே இல்லை. அதையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.
இதுபோன்ற பண விவகாரங்களை விடவும் சுற்றுலா பயணிகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று பத்திரமாகத் திரும்பக் கூட்டி வருவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. திட்டமிட்ட சுற்றுலா என்பதால் உள்ளூர் சுற்றுலா ஏஜென்ட்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அன்பாகவும், பொறுமையாகவும் ஹேண்டில் செய்ய வேண்டும். சிலர் காலையில் தங்களது இஷ்டத்துக்கு எழுந்திருப்பார்கள். சிலர் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வேறு சிலர் உணவு விஷயத்தில் சற்று கறாராக இருப்பார்கள். இப்படி அனைவரையும் சமாளித்து அந்தக் குழுவை வழிநடத்தும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலாவை அனுபவித்தால்தான் அடுத்தமுறையும் தேடி வருவார்கள். அதனால் கனிவும் பொறுமையும் எப்போதும் எங்களிடம் இருக்கும்.
தவிர அனைத்து விஷயங்களையும் வீட்டில் அமர்ந்தபடியே இன்டர்நெட் மூலம் முடித்துவிடுவதால் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடிகிறது. மாறாத புன்னகையும் கனிவும்தான் எங்களின் வெற்றிக்குக் காரணம்�� என்கிற சரோஜினி, டூர் சம்பந்தமான போன் விசாரிப்புகளுக்கு பொறுமையான வார்த்தைகளில் பதில் சொல்லியபடியே நமக்கு விடை தருகிறார்.  

Monday, August 5, 2013

டூ மினிட்ஸ் ரெசிபீஸ்


1) சௌசௌ ரெய்தா :-
சௌசௌ(பெங்களூர் கத்திரி) ஒன்றை தோல் சீவி பொடியாக நறுக்கி , ஆவியில் வேக வைத்து , சிறிய இஞ்சித்துண்டு, ஒரு பச்சை மிளகாய் , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும் .சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து , அரைத்த விழுதில் கொட்டு தயிர் கலந்து பரிமாறவும் ..

சௌசௌவை வேக வைக்காமல் ... இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்த்து, எண்ணெய்  விட்டு லேசாக வதக்கிசெய்தால் வாசனையாக இருக்கும் ..

2) ஸ்வீட் பொட்டேட்டோ  கீர் 

அரைலிட்டர் பாலை நன்றாக காய்ச்சி ஆறவிடவும் 100 கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, அரை  கப் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் காய்ச்சிய பால், புட் கலர் சேர்த்ஹு அருந்தவும்.
கூடுதல் ருசிக்காக 2 டேபிள்ஸ்பூன் இனிப்பில்லாத கோவா சேர்க்கலாம் 

3) தனியா துவையல் :-
தனியா 50 கிராம் , கடலை பருப்பு உளுந்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய - 8, இவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, சிறிய எலுமிச்சை அளவு புலி, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டவும் . 
இது உப்புமா, இட்லி , தோசைக்கு தொட்டு சாப்பிட்ட சூப்பராக இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலை கடைசியாக வறுத்து சேர்த்து அரைத்தால்  டேஸ்ட் கூடும்...


Monday, July 22, 2013

படித்ததில் ரசித்தது :-



வழுக்கையை மறைத்த அரசர்:-

ஜூலியஸ் சீசர் கிமு 44ஆம் ஆண்டில் மார்ச் 15ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.  அவருக்கு அஞ்சலி செலுத்த சென்றவர்கள், அவர் தலை வழுக்கையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  இந்த வழுக்கை இரகசியத்தை தம் இறுதிக்காலம் வரை 'விக்'கின் உதவியால் மறைத்து வைத்திருந்தார் சீசர் !

திருமணம் பற்றீ சிந்திக்காத விஞஞானி !
உலகத்தை மாற்றிய முதல் நூறு மனிதர்களுள் இரண்டாவது மனிதராய் இடம் பெற்றவர் ஸர்  ஐசக் நியுட்டன் தான். நியூட்டன் இறக்கும்வரை அறிவியல் ஆராய்ச்சியிலேயே இருந்ததால் செக்ஸ் பற்றிய உணர்வே இவருக்கு எழவில்லையாம். அதைப்பற்றி சிந்திக்கவும் நேரமில்லாததால் நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை .

இந்த டிப்ஸ் நல்லா இருக்கு:-

தேளின் மீது சாராயத்தை ஊற்றினால் தேளுக்கு வெறி ஏற்பட்டு அந்த வெறியில் தன்னை தானே கொட்டிக்கொண்டு இறந்து விடும். 

டிபன் (TIFFEN) என்ற வார்த்தையை முதன்முதலாக இங்கிலாந்தின் வடபகுதியில் உள்ள மக்கள் ஒரு கொச்சை சொல்லாக பயன்படுத்தி வந்தனர்  அதன் பொருள் கொஞ்சமாவது மது அருந்துங்கள் என்பதாகும்.  இந்தியாவில் எளிய சிற்றுண்டிக்கு டிபன் என்று சொல்கிறோம்.  

Thursday, July 18, 2013

Facebook Thathuvams:-

Facebook Thathuvam:-

நமக்கு வர்ற wife வெள்ளையா இருக்காளாங்றது முக்கியம் இல்ல மச்சி
அவ தொல்லையா  இருக்கக்கூடாது. அது தான் முக்கியம்...

Wednesday, July 17, 2013

Twitter interesting comments:-

Twitter interesting comments:- 


1)  'கறந்த பாலை விட சுத்தமானவன் இந்த நாஞ்சில் சம்பத் '
அடுத்து 'அமலாபாலை விட அழகானவன் ' னு  கூட சொல்வாரு 

2) எதிர் நீச்சல்ங்ற  வார்த்தையே இந்த தலைமுறைக்கு புரியாது எந்த ஆற்றில் தண்ணீ ஓடுது 

3) பின்னாடி நடக்கிறதை எல்லாம் முன்னாடியே காட்டுற திறமை, எனக்கு தெரிஞ்சு வண்டி side mirror க்கு மட்டும் தான் உண்டு 

4) கணவனின் நெற்றியை தவிர வீட்டின் எல்லா இடங்களிலும் ஒட்டி வைக்கப்படுகின்றன ஸ்டிக்கர் பொட்டுகள் 


படித்ததில் ரசித்தது :-

12.6.13 ஆனந்த விகடனில் பட்டிமன்ற ராஜா சொல்லியது :-

"ஒரு முறை உறவுக்கார பெண்கள் சிலருடன் ஒரு விஷேசத்துக்கு  போயிருந்தேன் தீடிர்னு அங்கே வந்த ஒருத்தர் 'சார் .. இந்த நாலு பேர்ல யாரு சார் உங்க wife?
னு  கேட்டுட்டார் ..அந்த சகோதரிகளும் நானும் ரொம்ப சங்கடப்பட்டு போயிட்டோம் . அட என்னை விடுங்க . ஆனா அந்த பெண்களின் மனசு என்ன பாடு பட்டிருக்கும் ? பொது இடங்கள்ல மத்தவங்களிடம் குறிப்பா, பெண்களிடம் எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு நம்மள்ல பலபேருக்கு தெரியறதே இல்ல." 

நானும் பல சமயங்களில் இது பற்றி  feel பண்ணி இருக்கிறேன் எப்பவுமே ஒரு நபரை பற்றீ முழு விவரமும் தெரியாத பட்சத்தில் கேட்டு தெரிந்து கொள்வதில் தவறே  இல்லை இந்த மாதிரி நம்மிடம் நேரடியாக வேறு ஏதாவது கேட்டு சங்கோஜப்பட வைப்பதை தவிர்க்கலாமே ....... 

Wednesday, July 10, 2013

மங்கையர் மலர் - ஜூலை 2013(புத்தகத்தில் படித்ததில் பிடித்தது)

டேபிள்  மேனர்ஸ்
சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் எக்ஸ்சிக்யூட்டிவ் செஃப்பாக பணிபுரியும் பட்டெல் சொல்லித்தரும் சில டேபிள மேனர்ஸ்
*எந்த பெரிய ஹோட்டலுக்கு போனாலும் டேபிளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டு போகவும
*ஏதாவது வித்தியாசமான ஸ்பெஷல் உணவை ஆர்டர் செய்வதாக இருந்தால் அது அன்றைக்கு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளவும்
*சாப்பிடும் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றகூடாது.
ஸ்பூன், ஃபோர்க், தம்ளர்களை உருட்டி விளையாடக்கூடாது
*டவலை தொடையின் மீது விரித்து கொள்ளலாம். அல்லது காலரில் 'டக்' செய்து கொள்ளலாம்.
*நாம் சாப்பிடும் சப்தமும் பேசும் ஒலியும் அடுத்த டேபிளுக்கு கேட்காத வண்ணம் நாகரிகமாக இருக்க வேண்டும்
ஸ்பூன்களை 'X' வடிவில் வைத்தால் 'சாப்பிட்டு முடிச்சாச்சு ' என்று அர்த்தம்
*ஃபிங்கர் பௌல் என்ற பெயரில் தரப்படும் வெந்நீர் குவளை, விரல் நுனிகளை நாசூக்காக நனைக்க மட்டுமே, கை முழுக்க தேய்த்து கழுவ நீங்கள் குழாயை தான் பயன்படுத்தனும்.
*பில்லில் 10% டிப்ஸ் வைப்பது நார்மலான விஷயம். சில பேர் சம்பந்தப்பட்ட செஃப்பை அழைத்து பாராட்டித்தருவதும் உண்டு.