Tuesday, March 30, 2010

விண்வெளிக்கு போற‌தும், புல்வெளிக்கு போற‌தும் இவ‌ங்க‌ கையில‌தான்....


சின்ன பிள்ளையா இருக்கிற‌ப்போ ந‌ம்ம‌ள்லாம் ராக்கெட் விட்டு விட்டு விளையாடி இருக்கோம். ஆனால், நெஜ‌மாவே ராக்கெட் தொழில்நுட்ப‌த்தை இந்தியாவில‌ செய‌ல்ப‌டுத்தி காட்டிய‌ டாக்ட‌ர். அப்துல் க‌லாம் அவ‌ர்க‌ள்கிட்ட‌ இந்த‌ ராக்கெட் மேல‌ அவ‌ருக்கு எப்போ ஆசை வ‌ந்துச்சுன்னு கேட்ட‌துக்கு, அவ‌ர் ப‌ள்ளியில‌ ப‌டிக்கிற‌ப்போ ப‌ற‌வைக‌ளோட‌ இய‌க்க‌ம் ப‌த்தி பாட‌ம் ந‌ட‌த்தின‌ டீச்ச‌ர் இருக்காங்க‌ள்ல‌, அவ‌ங்க‌ வ‌ந்து ப‌ற‌வைகள் ச‌ர‌ணால‌ய‌த்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு போய் ப‌ற‌வைக‌ளைல்லாம் க‌ண்கூடா காட்டி அதோட‌ இய‌க்க‌ம் ப‌த்தில்லாம் விள‌க்கினாராம். அதையெல்லாம் பாக்கிற‌துக்கும், கேக்கிற‌துக்கும் அப்டி ஒரு பிர‌மிப்பா இருந்துச்சாம். அதில‌ இருந்து ஒரு விமானியாக‌னும் அப்டிங்கிற‌ ஆசை என‌க்கு வ‌ந்துச்சு அப்டின்னு சொல்லி இருக்காராம் க‌லாம். இந்த‌ மாதிரி நேர‌டி அனுப‌வ‌ங்க‌ள் தான், ஒரு மாண‌வ‌னை ந‌ல்ல‌ நிலைக்கு உய‌ர்த்தும். ஆனா நிஜ‌மாவே இந்த மாதிரி த‌னியார் ப‌ள்ளிக‌ள்ல‌, ஆசிரிய‌ர்க‌ள்லாம் மாண‌வ‌ர்க‌ளுக்கு இப்டி வ‌ழிகாட்டுகிறாங்க‌ளா? ஆசிரிய‌ர்க‌ள் யாராக‌ இருந்தாலும் மாண‌வ‌ர்க‌ளை ஊக்குவிச்சா ந‌ல்லா இருக்கும். இந்த‌ ஒரு புண்ணிய‌மான வேலையை உண்மையா செய்வாங்க‌ளா ந‌ம்ம‌ ஊர் ஆசிரிய‌ர்க‌ள்?

5 comments:

  1. தலைப்பு நன்றாக இருக்கிறது,,,கேள்வியும்தான் ,,,ஆனால் விடை தெரியல,,,யாராவது ஆசிரிய பெருந்தகைகள் இதற்கு பதில் சொல்லுங்களேன்,,இல்லன உங்க தல சுக்கு நூற வெடிக்கணும்னு சாபம் போட்டுருவன் ஆமா!!

    ReplyDelete
  2. அப்துல் கலாம் கூட வகுப்பில எத்தன பேர் படிச்சிருப்பாங்க. எல்லோரும் என்னென்னவா ஆகி இருப்பாங்க. அது மட்டுமல்ல கல்யாணி காரணம் அவருக்குள் இருந்த தீ.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. முழுக்க உண்மைகளை வைத்தே ஒரு பதிவா? Nice.

    ஸ்ரீ....

    ReplyDelete
  5. ச‌ங்க‌ர் ! உங்க‌ க‌மென்ட் அழகா இருக்கு. ந‌ன்றி

    ReplyDelete