Friday, January 1, 2010

ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு.........


இப்போல்லாம் எல்லா ப‌ச‌ங்க‌ளுக்குமே நூடில்ஸ், பிஸ்ஸா, ப‌ர்க‌ர் இந்த‌ மாதிரி தான் சாப்பிட பிடிக்குது. திருநெல்வேலி புது ஸ்டான்டுக்கு வெளியே சாய‌ங்கால‌ம் 6 ம‌ணி ஆச்சுன்னா, ப‌ஸ்ல போற‌ப்போ, ஒரு விஷ‌ய‌த்தை பார்க்க‌லாம். என்ன‌ன்னா, ஒரு வ‌ண்டில‌ பிடிச்சிட்டு வ‌ந்த மீனை அப்டி ஃப்ரெஷ்ஷா வித்துகிட்டு இருப்பாங்க‌. அதுக்கு அடுத்து, இன்னொரு வ‌ண்டில அப்டி அதே ஃப்ரெஷ் மீனை பொரிச்சு சுட‌ சுட‌ வித்துகிட்டு இருப்பாங்க‌. பஸ்ல‌ அந்த‌ இட‌த்தை க்ராஸ் ப‌ண்ற‌ப்போ மீனை பொரிக்கிற‌ வாச‌ம், அதுவும் சாய‌ங்கால‌ம் சாப்ட‌ற‌துக்கு ரொம்ப‌ ஆசையாத்தான் இருக்கும். இதுக்காக‌வே அங்கே செம‌ கூட்ட‌மா இருக்கும். இந்த‌ ஃபாஸ்ட் ஃபுட் இப்போ ம‌ட்டும்னு இல்ல‌. தொல் பொருள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் என்ன‌ சொல்றாங்க‌ன்னா, ப‌ழைய‌ கால‌த்தில‌ கிரேக்க‌ நாட்டுல‌, அவ‌ங்க‌ளுக்கு வெளியே சாப்ட‌ற‌து ரொம்ப‌ ஜாலியா இருக்குமாம். ந‌ம்மளுக்கும் கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ஜாலியாத்தான் இருக்கு. ஆனால் முந்தி மாதிரி இல்ல‌. தூத்துக்குடில‌ ஒரு ஹோட்ட‌ல்ல‌3 த‌ந்தூரி ரொட்டி, ப‌னீர் ப‌ட்ட‌ர் ம‌சாலா குடும்ப‌த்தோட‌ போய் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஆயிருது. மாச‌த்துக்கு ஒரு த‌ட‌வை கூட‌ வெளியே போய் சாப்பிட‌ற‌து ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்துக்கு ஒரு க‌ன‌வு மாதிரி இருக்கு. விலைவாசியும் ஏறிக் கொண்டே போகுது. இது எங்கே போய் முடியுமோ!

3 comments:

  1. ஹாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    நாட்டுக்கு தேவையான கவலைதான்
    kindly visit my blog

    ReplyDelete
  2. 2010ன் முதல் கவலை..........

    ReplyDelete
  3. First timer to ur blog. Your thoughts are expressed very beautifully. romba nalla ezhuthareenga. naan ungalai follow pannarein :):)

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete