Friday, October 30, 2009

இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......


எந்த ஹோட்டலுக்குப் போனாலும் சாப்பாடு வைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாலேயே ஒரு தட்டும், முள்கரண்டி, கத்தி, ஸ்பூன் இதெல்லாம் கொண்டு வச்சிட்டு போயிடுவாங்க. நமக்கு செம பசியாக இருக்கும். ஆனா சாப்பாடு அரை மணி நேரத்திற்கு அப்றமா தான் மெதுவாக வரும். அதுவரை, இந்த கரண்டியதான் நம்ம பாத்துகிட்டே இருக்கனும். இந்த கரண்டிய முதல்ல கண்டுபிடிச்சவங்க யார்னு பாத்தீங்கன்னா கிரேக்க நாட்டுக்காரங்க தான் ! அந்த காலத்திலெல்லாம் கடல்ல கிடைக்கிற சங்கை எடுத்து, அதை கூட ஸ்பூனா பயன்படுத்தியிருக்காங்களாம். ஆனா, நம்ம் கரண்டிய வச்சு சாப்பிட்டால் வயிறு நிறைந்த மாதிரியே இருக்காது. இது எதுக்குன்னு பாத்தீங்கன்னா, சாப்பாட்டை பிசைந்து கை நிறைய எடுத்து சாப்பிட்டால் தான் சாப்பாடு செமிக்கும் அப்டின்னு நெதர்லாந்து மருத்துவர்கள் சொல்றாங்க. அதே மாதிரி கையால சாப்பிடறதனால விரல்கள்லாம் மென்மையாக இருக்குமாம். அப்றமா விரலுக்கு நல்ல வளைஞ்சு கொடுக்கும் தன்மையும் கிடைக்குமாம். இனிமேல் எப்படி சாப்பிடறது? ரூம் போட்டு யோசிங்கப்பா ......

No comments:

Post a Comment