Wednesday, November 11, 2009

நாடுக‌ளுக்கு இடைல‌ சாப்பாட்டுக்காக‌ ச‌ண்டை..


வீடுக‌ள்ல‌ உப்பு இல்லை, கார‌ம் இல்லைன்னு ஒரு குழ‌ம்புக்காக‌ க‌ண‌வ‌னும், ம‌னைவியும் ச‌ண்டை போடுவாங்க‌. ஆனா சிக்க‌ன் டிக்கா அப்டின்னு ஒரு ரெசிபிக்காக‌ இந்தியாவுக்கும், பிரிட்ட‌னுக்கும் இடையே பெரிய‌ ச‌ண்டையே வ‌ந்துடுச்சாம். நாடுக‌ளுக்கு இடைல‌ எல்லைக்காக‌ ச‌ண்டை வ‌ரும். ஆனால், சாப்பாட்டுக்காக‌ ச‌ண்டை வ‌ருமா என்ன‌? அப்டி என்ன‌ ச‌ண்டை அப்டின்னா, இந்தியாவுக்கும், பிரிட்ட‌னுக்கும் எப்டி ச‌ண்டை வ‌ந்துச்சுன்னா, சிக்க‌ன் டிக்கா இந்திய‌ உண‌வு கிடையாது. இது பிரிட்ட‌னோட‌ பார‌ம்ப‌ரிய‌ உண‌வு அப்டின்னு பிரிட்ட‌ன்கார‌ங்க‌ ந‌ம்ம‌ இந்தியா கூட‌ ச‌ண்டை போட‌றாங்க‌. ஆனா ந‌ம்ம‌ இந்தியாவில் இருக்கிற‌ ஒரு த‌லைமை செப் இத‌ ப‌த்தி சொல்ற‌ப்போ, சிக்க‌ன் டிக்கா முக‌லாய‌ர்க‌ளோட‌ பார‌ம்ப‌ரிய‌ உண‌வு. முக‌லாய‌ர்க‌ள் இந்தியாவில‌ ஆட்சி செஞ்ச‌ப்போ தான் , சிக்க‌ன் டிக்கா ம‌சாலாவ‌ க‌ண்டுபிடிச்சாங்க அப்டின்னு இந்தியா சார்பில‌ சொல்லிகிட்டு இருக்காங்க‌.இன்னும் இதுக்கு முடிவு வ‌ர‌லை....

No comments:

Post a Comment